🔥 TRENDING જય ગણેશ 🙏 પારનેરા ના સમ્રાટ ગણપતિ બા... AP Small Traders to Receive Credit Car... PIL Filed in AP High Court Challenges... Gujarat launches inspection drive to e... Gujarat’s pollution control model offe... Parnadi na kathe je reling nu kaam Bak...
15 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ஆம்பூர் அருகே குபேர கணபதி ஆலய வளாகத்தில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 3 கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்திய நபர் கைது.

✍️ Reporter: A. Gokul Raj 🗓 15 Sep 2026, 12:05 AM 👁 10
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் எம்.எம்.நகர் பகுதியில் அமைந்துள்ள குபேர விநாயகர் ஆலயம். கடந்த ஆண்டு இதே நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்ய இருந்த நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோயில் வளாகத்திற்குள் புகுந்து அங்கே இருந்த வராகி அம்மன், நாகாளம்மன் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மூன்று கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்
துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உடைக்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில் குபேர விநாயகர் ஆலயத்தில் இருந்த சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📲Get App