🔥 TRENDING Punjab Ends Power Cuts After Resolving... Punjab Police Arrest 10 in Jalandhar G... Three suspects arrested after veterina... Millions in cash and jewellery stolen... CM Samrat Chaudhary Announces Two-Day... Special 'Pooja' Train to Run Nine Dail...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம்

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 12 Sep 2026, 03:14 PM 👁 21
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், 36 வயது இசக்கியப்பன் 10 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்ததற்காக ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் மற்றும் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளி இசக்கியப்பன் (36) மீது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 19.10.2020 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் திருமதி. C. சாந்தி அவர்களால் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தார்.

வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி திரு. சுரேஷ் குமார் அவர்களால் 11.09.2026 அன்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் மற்றும் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் காவல் கண்காணிப்பாளர் திரு. M. சண்முகம், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், ஆய்வாளர் திருமதி. S. சாந்தி, மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. உஷா ஆகியோர் விசாரணை மற்றும் வழக்கில் முக்கிய பங்கு வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி அவர்களால் இந்த நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இந்த ஆண்டில் 19 போக்சோ வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுள்ளது. இதில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, 5க்கு ஆயுள் தண்டனை, 2க்கு ஆயுள் தண்டனை, 1க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
📲Get App